உலகம்செய்திகள்

லண்டனுக்கு ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள்… பாதிப்பு அபாயம் உள்ள இடங்கள் குறித்த விவரம்

Share
tamilni 189 scaled
Share

லண்டனுக்கு ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள்… பாதிப்பு அபாயம் உள்ள இடங்கள் குறித்த விவரம்\

லண்டனில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சாத்தியம் என்பது குறித்து சுற்றுச்சூழல் ஏஜன்சி எச்சரித்துள்ளது குறித்த விவரம் இச்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.

லீ நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக Walthamstow, Tottenham மற்றும் எட்மண்டன் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில் பெருவெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், Goodmayes மற்றும் Pinner ஆகிய பகுதிகளும் அபாயத்தில் உள்ள பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு லண்டனில் ஆற்று நீர் மட்டம் உயரும் அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று, அதாவது, பிப்ரவரி 9ஆம் திகதி காலை முழுவதும் கனமழையால் லண்டன் பாதிப்புக்குள்ளாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நண்பகலில் அது முடிவுக்கு வரலாம் என்றாலும், மாலை 6 மணிக்கு மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...