tamilni Recovered 2 scaled
உலகம்செய்திகள்

கடைசியில் லண்டன் ஹொட்டல் அறையில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி: என்ன நடந்தது

Share

கடைசியில் லண்டன் ஹொட்டல் அறையில் இரவு தங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இளவரசர் ஹரி: என்ன நடந்தது

மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்து அமெரிக்காவில் இருந்து பறந்துவந்த இளவரசர் ஹரி, அரண்மனையில் எங்கும் தங்காமல் இரவு ஹொட்டலுக்கு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஏற்கனவே தமது மகன்கள் இருவருக்கும், சகோதரர்களுக்கும் தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தை மன்னர் சார்லஸ் தெரியப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தந்தையின் உடல்நிலை குறித்து நேரில் அறிந்துகொள்ளும் பொருட்டும் அவருக்கு ஆறுதல் கூறும் பொருட்டும் கலிபோர்னியாவில் வசித்துவரும் இளவரசர் ஹரி உடனடியாக லண்டன் திரும்பினார்.

மன்னரை சந்தித்து சுமார் 45 நிமிடங்கள் இருவரும் பேசிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரி தம்மை சந்திக்க வருகிறார் என்ற தகவல் தெரிந்திருந்ததால், அவர் வரும் வரையில், மன்னர் சார்லஸ் புறப்பட தயாராக இருந்த பயணத்தை தாமதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, பகை மறந்து சகோதரர்கள் இருவர் ஒன்றிணையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் சந்திப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

தமது மனைவி கேட் மிடில்டன் மருத்துவமனை சிகிச்சையில் இருந்து மீண்டு வருவதால், அவரது கவனம் முழுவதும் மனைவி மீதே உள்ளது என்று கூறப்படுகிறது. அத்துடன் ஈஸ்டர் பண்டிகை முடியும் மட்டும் இளவரசர் வில்லியம் விடுப்பு எடுத்துக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் தான் சுமார் 5,000 மைல்கள் பயணித்து லண்டன் திரும்பியுள்ளார் இளவரசர் ஹரி. தந்தையுடன் சுமார் 45 நிமிடங்கள் பேசிய அவர், இரவு அரச குடும்பத்து மாளிகைகளில் எங்கும் தங்காமல் ஹொட்டல் ஒன்றில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது.

தமது இரு பிள்ளைகளுடன் மனைவி மேகன் மார்க்கல் அமெரிக்காவில் தனியாக இருப்பதால், இளவரசர் ஹரி லண்டனில் அதிக நாட்கள் தங்கும் வாய்ப்பு குறைவு தான் என்றே கூறப்படுகிறது.

இருப்பினும், சகோதரர் வில்லியத்தை சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால், அதை ஹரி கண்டிப்பாக தவறவிடமாட்டார் என்றே கூறுகின்றனர்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
1722136783 24 664a5be3012cc
செய்திகள்இலங்கை

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்கள் முடக்கம்! – 3,500 சட்டத்தரணிகள் பங்கேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டம்; அரசாங்கத்திற்கு கடும் எச்சரிக்கை!

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் மிலேச்சத்தனமாகச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்,...

image 1200x800 7
செய்திகள்இந்தியா

இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குக! – பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவசரக் கடிதம்!

தமிழ்நாட்டிலுள்ள முகாம்களிலும், வெளியேயும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக்...

image 1200x800 6
உலகம்செய்திகள்

அமெரிக்கா எங்களை வற்புறுத்துகிறது! – முனிச் மாநாட்டில் ட்ரம்ப் நிர்வாகம் மீது ஜெலன்ஸ்கி பகிரங்கக் குற்றச்சாட்டு!

ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் வோலோடிமிர்...

image 1200x800 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளை கற்குவாரி அனர்த்தம்: இராணுவத்தின் தீவிர தேடுதலில் இரு சடலங்கள் மீட்பு!

பண்டாரவளை, லியன்கஹவெல பகுதியில் உள்ள கற்குவாரி ஒன்றில் கடந்த 14-ஆம் திகதி ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தில்...