tamilni 104 scaled
உலகம்செய்திகள்

பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை

Share

பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் வாழும் மக்களுக்கு பிரான்ஸ் அரசு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், இந்த ஆண்டு, ஜூலை மாதம் 26ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 11ஆம் திகதி வரை, ஒலிம்பிக் போட்டிகளும், ஆகத்து 27 முதல் செப்டம்பர் 8 வரை, பாராப்லிம்பிக் போட்டிகளும் நடைபெற உள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளின்போது பாரீஸில் வாழ்பவர்கள் பார்சல்களை அனுப்பவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு இணையதளத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை மாதம் 24ஆம் திகதி முதல் ஆகத்து மாதம் 12ஆம் திகதி வரையும், ஆகத்து 27 முதல் செப்டம்பர் 8ஆம் திகதி வரையும் பாரீஸில் வாழ்பவர்கள் பார்சல்களை அனுப்பவேண்டாம் என போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் பார்சல் சேவை நடைபெறுமானால், போக்குவரத்துக் குறைவாக உள்ள நாட்களில் பார்சல்களை அனுப்புமாறும், பாதுகாப்பு வளையங்களுக்கு வெளியில் அமைந்துள்ள பார்சல் பெறும் இடங்களுக்கு நடந்தோ அல்லது சைக்கிளில் சென்றோ பார்சல்களைக் கொண்டு சென்று உதவுமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது அமைச்சகம்.

 

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...