1996740 ship scaled
உலகம்செய்திகள்

14 கப்பல்களில் கச்சா எண்ணெய்… விற்க முடியாமல் கடும் போராட்டத்தில் ரஷ்யா

Share

14 கப்பல்களில் கச்சா எண்ணெய்… விற்க முடியாமல் கடும் போராட்டத்தில் ரஷ்யா

அமெரிக்கத் தடை உள்ளிட்ட சிக்கல் காரணமாக 14 கப்பல்களில் நிரப்பப்பட்ட கச்சா எண்ணெய் விற்க முடியாமல் பல வாரங்களாக ரஷ்யா போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய கடற்பகுதியில் பல வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது ரஷ்யாவின் 14 எண்ணெய் கப்பல்கள். ஒவ்வொரு கப்பலிலும் 10 மில்லியன் பீப்பாய் அளவுக்கு கச்சா எண்ணெய் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் அமெரிக்கத் தடைகள் மற்றும் கட்டணச் சிக்கல்கள் காரணமாக இதுவரை விற்கப்படவில்லை என்றே வெளியான தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாத காலம் உற்பத்தி செய்த இந்த கச்சா எண்ணெய் மொத்தமாக 1.3 மில்லியன் மெட்ரிக் டன்கள் என்றே கூறப்படுகிறது.

ரஷ்யாவின் Sakhalin-1 திட்டத்தில் அமெரிக்காவின் Exxon Mobil நிறுவனம் இணைந்து செயல்பட்டு வந்தது. ஆனால் ரஷ்ய- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் 2022ல் Exxon Mobil இந்த திட்டத்தில் இருந்து வெளியேறியது.

அதன் பின்னர் ரஷ்யாவால் தொடர்ந்து அந்த திட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. இதனால் அதன் உற்பத்தி மொத்தமாக சரிவடைந்தது. அதிலிருந்து முழுமையாக மீளவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...