tamilni 301 scaled
உலகம்செய்திகள்

பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன்

Share

பதவி விலகினார் சிங்கப்பூர் அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன்

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் சுப்ரமணியம் ஈஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதையடுத்து அவர் தனது பதவி விட்டு விலகியுள்ளார்.

அவர் மீது ஊழல் உள்ளிட்ட 27 குற்றச்சாட்டுகளை அந்நாட்டு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, அமைச்சர் பதவி விலகல் குறித்து பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இருப்பினும் தன் மீதான குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துள்ளார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடமிருந்து இருந்து சுமார் 4 லட்சம் சிங்கப்பூர் டொலர் அளவுக்கு வெகுமதிகளை ஈஸ்வரன் பெற்றதாக ஊழல் தடுப்பு மற்றும் விசாரணை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை கால்பந்து போட்டி, இசை நிகழ்ச்சி, சிங்கப்பூர் ஃபார்முலா 1 கிராண்ட் ப்ரீ டிக்கெட்டுகள் என பல சலுகைகளை ஈஸ்வரன் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஊழல், மோசடிகள் அற்ற ஆட்சி நடத்துவதாக சிங்கப்பூர் தெரிவித்து வருகின்ற நிலையில், அமைச்சர் ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...