tamilni 131 scaled
உலகம்செய்திகள்

கொடூர குற்றங்கள் செய்துவிட்டு சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய முன்னாள் அமைச்சர்: சுவிட்சர்லாந்தில் இன்று விசாரணை துவக்கம்…

Share

காம்பியா நாட்டின் சர்வாதி ஒருவரின் கீழ் உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் மீது பகீர் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வழக்கு இன்று சுவிட்சர்லாந்தில் விசாரணைக்கு வருகிறது.

காம்பியா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி Yahya Jammeh. அவரது ஆட்சிக்காலத்தின்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் Ousman Sonko (54).

2000க்கும் 2016க்கும் இடையில், கொலை, பல வன்புணர்வுக்குற்றங்கள் மற்றும் சித்திரவதை முதலான கொடூரச் செயல்களில் ஈடுப்பட்டதாக Ousman மீது குற்றம் சாட்டப்பட்டது.

2017ஆம் ஆண்டு, Yahya புரட்சியாளர்களால் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட, அவரது 22 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, Ousman சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரிய நிலையில், அவர் சுவிஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் Ousman வழக்கு விசாரணைக்கு வருகிறது. இன்று அவரது வழக்கு விசாரணைக்கு வருவதைத் தொடர்ந்து, அவரால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட கால காத்திருப்புக்குப் பின் இப்போதாவது அவர் நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டாரே என நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

Ousmanஆல் தொடர்ந்து பலமுறை வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பின்றா (Binta Jamba) என்னும் பெண், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒன்றின்போது தன் கணவர் Ousmanஆல் கொல்லப்பட்டதாகவும், தன்னை பிணைக்கைதியாக வைத்துக்கொண்டு தொடர்ந்து அவர் தன்னை வன்புணர்ந்ததாகவும், தான் கருவுற்றபோதெல்லாம், Ousman தனக்கு கருக்கலைப்பு செய்ததாகவும் கூறுகிறார்.

தானும் தனது குடும்பமும் நீதிக்காக 25 ஆண்டுகள் காத்திருப்பதாகக் கூறும் பின்றா, தனக்கு நீதி கிடைக்கும் வரை தனக்கு நிம்மதி கிடைக்காது என்றும் கூறுகிறார்.

Ousmanக்கு, அதிகபட்சமாக ஆயுதண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...