8d07038a ed73 4a54 bfc2 52ca2e02ffb8 0
உலகம்செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்ட பறவைகளிலும் பறவைக் காய்ச்சல்: பிரான்சில் கொல்லப்பட்ட 8,700 வாத்துகள்

Share

பிரான்சிலுள்ள வாத்துப்பண்ணை ஒன்றில், தடுப்பூசி பெற்ற பறவைகளுக்கும் பறவைக்காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சிலுள்ள Vendee என்னுமிடத்தில் அமைந்துள்ள வாத்துப்பண்ணை ஒன்றிலுள்ள வாத்துகளுக்கு, நவம்பர் மாதம் பறவைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் அந்த பண்ணையிலுள்ள வாத்து ஒன்றிற்கு பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இம்மாதம், அதாவது, ஜனவரி 2ஆம் திகதி தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பண்ணையிலுள்ள 8,700 வாத்துகள் கொல்லப்பட்டுள்ளன.

டிசம்பரில், அதிக அபாய பகுதிகளில் உள்ள வாத்துக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தவேண்டும் என பிரான்ஸ் வேளாண்மை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், இந்த குறிப்பிட்ட பண்ணையில் உள்ள வாத்துக்களுக்கு அரசு உத்தரவின்படி மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...