உலகம்செய்திகள்

”சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் விஜயகாந்த் கேப்டன்”- புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

tamilni 37 scaled
Share

சினிமாவில் மட்டுமல்ல விஜயகாந்த் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார் என பிரதமர் மோடி புகழ்ந்து கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எ.வ.வேலு, திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் மோடி, கடந்து வருடம் டிச.28-ம் திகதி மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

பிரதமர் மோடி கூறியதாவது…
”கடந்த 2023வது வருடத்தின் கடைசி சில வாரங்கள் கடினமானதாக இருந்திருக்கிறது. கனமழை மக்களைக் கடுமையாக பாதித்தது.

மேலும், சில நாட்களுக்கு முன்பு விஜயகாந்தை இழந்திருக்கிறோம். சினிமாவில் மட்டுமல்ல அவர் அரசியலிலும் கேப்டனாக இருந்து வந்திருக்கிறார். திரைப்படங்களில் அவரது செயல்பாடு காரணமாக மக்களின் இடத்தில் தனி இடம் பிடித்தார். அரசியல்வாதியாகவும் தேசிய நலனுக்கு அவர் முன்னுரிமை கொடுத்து வந்திருக்கிறார். அவருக்கு என் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறேன். அவரது குடும்பத்திற்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...