15 9
உலகம்செய்திகள்

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்! ஒரே நாட்டில் மட்டும் 7 இடங்கள்

Share

உலகின் மிகவும் ஆபத்தான நகரங்கள்! ஒரே நாட்டில் மட்டும் 7 இடங்கள

ஒரு லட்சம் மக்களில் கொல்லப்படுவதன் விகிதத்தின்படி 2024யின் மிகவும் ஆபத்தான 10 நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அவற்றில் மெக்சிகோ நாட்டில் மட்டும் 7 நகரங்கள் ஆபத்தான இடங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நகரங்களில் எல்லாம் துரதிர்ஷ்டவசமாக போர் பிரச்சனைகள் அல்லது சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற பெரிய அளவிலான உள் மோதல்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

கொலிமா நகரமானது 100,000 குடிமக்களுக்கு 140.32 என்ற கொலை விகிதத்துடன், உலகின் மிக ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

வன்முறை கும்பல்கள் இங்கு போதைப்பொருள் கடத்தல், கொலை உள்ளிட்ட குற்றங்களை செய்கின்றன.

117.83 என்ற கொலை விகிதத்துடன் 2024யில் உலகின் இரண்டாவது ஆபத்தான நகரமாக Ciudad Obregon வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கும் போதைப்பொருள் பரவல், கொலைகள், கடத்தல்கள் மற்றும் வன்முறைகள் போன்ற குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

117.24 என்ற கொலை விகிதத்துடன் ஹைதி நாட்டின் தலைநகரான Port-au-Prince மூன்றாவது இடத்தில் உள்ளது.

வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மை ஆகியவற்றால் சமீபத்திய ஆண்டுகளில் இங்கு நிலைமை மோசமாகியுள்ளது.

மேலும் அரசியல் கொந்தளிப்பு, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் இயற்கை பேரழிவுகளின் பின்விளைவுகளால் இங்கு மக்கள் பலர் ஆபத்தான சூழலில் வாழ்கின்றனர்.

இந்நகரம் உலகின் ஆபத்தான நகரங்களின் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஒரு லட்சம் குடிமக்களுக்கு 105.13 என்ற கொலை விகிதத்தை கொண்டிருப்பதால்தான்.

ஏனெனில், இங்கு கடத்தல்கள் மற்றும் பிற வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள் விற்பனை தொடர்பான போட்டிதான் பெரும்பாலும் வன்முறை சம்பவங்களுக்கு காரணமாக அமைகிறது.

பசிபிக் கடற்கரையில் உள்ள பரபரப்பான துறைமுக நகரமான மன்சானிலோவில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் இங்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் போன்றவையாகும்.

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு இடையே சண்டை நடப்பதனால், இந்நகரம் 102.58 என்ற விகிதத்தைக் கண்டது.

அமெரிக்க எல்லையில் அமைந்துள்ள பிரபலமற்ற மோசமான நகரமாக உள்ளது டிஜுவானா. இங்கு பெரும்பாலும் செயற்கை போதைப்பொருள் கடத்தல், கும்பல் தொடர்பான நடவடிக்கைகளின் காரணமாக 91.76 கொலை விகிதத்தை டிஜுவானா பெற்றுள்ளது.

மேலும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் சட்ட அமலாக்கத்திற்கும் இடையே இங்கு அடிக்கடி சண்டைகள் நடக்கின்றன.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...