tamilnif 15 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்

Share

நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவினால் நடத்தப்பட்ட சித்திரப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தரம் இரண்டு மாணவன் முதல் பரிசு வென்றுள்ளார்.

அனுராதபுரம் திரப்பன பகுதியைச் சேர்ந்த தஹாம் லோஷித பிரேமரட்ன என்ற சிறுவனே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் வரைந்து அனுப்பிய ஓவியம் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், நாசாவின் அடுத்த ஆண்டுக்கான நாட்காட்டியிலும் இடம்பிடித்துள்ளது.

விண்வெளியில் வாழ்தல் மற்றும் பணி செய்தல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற போட்டியில் லோஷித வெற்றியீட்டியுள்ளார்.

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியின் ஜூலை மாத புகைப்படமாக இந்த சிறுவனின் சித்திரம் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி: பண்டிகை முற்பணம் ரூ. 15,000 ஆக உயர்வு! இடர் கடன் முற்பணம் ரூ. 4 இலட்சமாக அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணம் (Festival Advance) மற்றும் இடர் கடன் முற்பணம் (Distress...

MediaFile 2 1
செய்திகள்இலங்கை

இலங்கை வானிலை அறிக்கை: பிற்பகலில்  மழைக்கு வாய்ப்பு – சில இடங்களில் 75 மி.மீ வரை பலத்த மழை வீழ்ச்சி!

நாட்டின் பல பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (நவம்பர்...

large pli 2 219454
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸ், வியட்நாமைத் தாக்கிய கல்மேகி சூறாவளி: பலி 200-ஐ தாண்டியது – பிலிப்பைன்ஸில் அவசர நிலை அறிவிப்பு!

மத்திய பிலிப்பைன்ஸை கடுமையாகத் தாக்கிய கல்மேகி (Kalmaegi) சூறாவளியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 188ஆக...