உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் மாற்றம்

tamilnih 4 scaled
Share

பிரித்தானியாவில் குடும்ப விசாவுக்கான நடைமுறையில் மாற்றம்

பிரித்தானியவில் குடும்ப விசாக்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பில் மாற்றம் செய்ய அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அண்மையில் பிரித்தானியாவில் புலம்பெயர்தலை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசாங்கம் சில கடுமையான நடைமுறைகளை விதித்திருந்தது.

அதன்படி வெளிநாட்டில் இருந்து ஒரு குடும்ப உறுப்பினரையோ அல்லது நண்பரையோ பிரித்தானியாவுக்கு அழைத்து வர, குறைந்தபட்சம் ஆண்டுக்கு £38,700 பவுண்டுகள் சம்பாதிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போது இந்த முடிவில் சற்று மாற்றம் செய்து ஆண்டுக்கு குறைந்தபட்ச வருமானம் £29,000 பவுண்டுகள் பெற வேண்டும் என அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த மாற்றம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புதிய விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இந்த மாற்றங்கள் பொருந்தும் என்றும், ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளவர்கள் தற்போதைய, மிகக் குறைந்த, வருமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது குடும்ப உறுப்பினர் ஒருவரை பிரித்தானியாவுக்கு அழைத்து வர வேண்டுமெனில் அவரின் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியம் £18,600 பவுண்டுகளாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...