tamilni 404 scaled
உலகம்செய்திகள்

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

Share

கொலைக்களமான பல்கலைக்கழகம்… துப்பாக்கிதாரியின் பதறவைக்கும் பின்னணி

செக் குடியரின் ப்ராக் நகரில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் துப்பாக்கியால் 14 பேர்களை கொன்றதுடன், தாமும் தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த கோர சம்பவத்தில் 25 பேர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்திய அந்த நபரே கடந்த வாரம் வனப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் குழந்தையின் மரணத்திற்கும் காரணம் என்று நம்பப்படுகிறது.

ப்ராக் நகரில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்தின் தத்துவ பீடம் மீதே வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் அந்த தாக்குதல்தாரியும் தற்கொலை செய்துகொண்டதாக செக் குடியரசு உள்விவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். மேலும், அந்த தாக்குதல்தாரி சார்லஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவம் பயின்று வந்த மாணவன் David Kozak என்றே அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் குடியிருப்பில் அவரது தந்தையின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, அந்த மரணத்திற்கு காரணம் அவரா என்பது குறித்தும் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.

மட்டுமின்றி, தமது டெலிகிராம் செயலியில், உலகத்தை தாம் வெறுப்பதாகவும் முடிந்த அளவுக்கு வலிகளை விட்டுச்செல்ல தாம் முடிவெடுத்துள்ளதாகவும் David Kozak பதிவு செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பல்கலைக்கழக தாக்குதல் சம்பவத்தில், தொடக்கத்தில் 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், 14க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...