tamilni 286 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை

Share

இஸ்ரேல் உளவுத்துறையுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை

இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக ஈரான் தகவல் வெளியிட்டுள்ளது.

ஈரானின் தென்கிழக்கு, சிஸ்தான் – பாலுசெஸ்தான் மாகாணத்திலுள்ள சாஹேதான் சிறையில் நேற்று(16) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தார் என்றும், குறிப்பாக இஸ்ரேலின் மொசாத் உளவுத்துறையுடன் அவருக்கு தொடர்புள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக முக்கியமான தரவுகளை திரட்டி மொசாத் உள்ளிட்ட வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு அவர் கைமாற்றியுள்ளார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஈரானுக்கு எதிரான குழுக்கள் மற்றும் அமைப்புகளுக்கு பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஒரு மொசாத் அதிகாரியிடம் இரகசிய தகவல்களை கையளித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் அந்த நபர் எப்போது கைதானார் அல்லது அவரது பெயர் உள்ளிட்ட தகவல்கள் எதையும் ஈரான் அதிகாரிகள் வெளியிட மறுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...