rtjy 92 scaled
உலகம்செய்திகள்

பிரபல நடிகர் மீது பல பெண்கள் அத்துமீறல் குற்றச்சாட்டு: கனடா அதிரடி

Share

பிரபல நடிகர் மீது பல பெண்கள் அத்துமீறல் குற்றச்சாட்டு: கனடா அதிரடி

பிரபல பிரெஞ்சு நடிகர் ஒருவர் மீது பல பெண்கள் புகாரளித்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், கனேடிய மாகாணம் ஒன்று அவருக்கு வழங்கிய உயரிய விருதொன்றை அதிரடியாக திரும்பப் பெற்றுள்ளது.

பிரபல பிரெஞ்சு நடிகரான Gérard Depardieu தங்களிடம் தவறாக நடந்துகொடதாக, நடிகைகள் உட்பட 13 பெண்கள் புகாரளித்துள்ளார்கள். அவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், Gérardஆல் பாதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவரான Emmanuelle Debever என்னும் பெண், ஒரு வாரம் முன்பு பாரீஸிலுள்ள நதி ஒன்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

Emmanuelle தற்கொலை செய்துகொண்ட அதே நாளில், பிரெஞ்சு தொலைக்காட்சி ஒன்றில் ஆவணப்படம் ஒன்று வெளியானது. அது, Gérard மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையுடன் தொடர்புடைய ஆவணப்படமாகும்.

அந்த படத்தில், வடகொரியாவுக்குக் நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்த Gérard, பெண்கள் முன்பாகவே ஆபாசமாக ஒலி எழுப்பியதுடன், 10 வயது சிறுமி உட்பட குதிரை ஓட்டும் பெண்களைக் குறித்து மோசமாக விமர்சித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளதுடன், புகைப்படம் எடுக்கும்போதே, தான் தன் அருகே நிற்கும் ஒரு வடகொரிய பெண்ணின் பின்பக்கங்களைத் தொட்டுக்கொண்டிருப்பதாகவும் Gérard கூற, அதுவும் அதே வீடியோவில் பதிவானது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.

அந்த ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து, கனடாவின் கியூபெக் மாகாண பிரீமியரான François Legault, நடிகர் Gérardக்கு கியூபெக் மாகாணத்தால் வழங்கப்பட்ட உயரிய விருதான Ordre national du Québec என்னும் விருதைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

பெண்களை மோசமாக விமர்சிக்கும் Gérard, அந்த கௌரவம் மிக்க விருதுக்கு தகுதியானவரல்ல என்று கூறியுள்ள François Legault அலுவலகம், அவரது நைட் பட்டத்தைப் பறித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் கியூபெக் மாகாண அரசு அறிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு கியூபெக் மாகாண பிரீமியராக இருந்த Bernard Landry எபவரால் நடிகர் Gérardக்கு நைட் பட்டம் வழங்கப்பட்டது. கியூபெக்கில் இப்படி அந்த பட்டம் பறிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...