5 18 scaled
உலகம்செய்திகள்

கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி

Share

கடவுளின் கோபத்துக்கு இஸ்ரேல் உள்ளாகும்: ஆக்ரோஷமான உரைக்கு மத்தியில் மயங்கி விழுந்த துருக்கி எம்.பி

இஸ்ரேஸ் கடவுளின் கோபத்துக்கு உள்ளாகும் என துருக்கி நாட்டு எம்.பி நாடாளுமன்றத்தில் காட்டமாக பேசிவிட்டு மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர் இடையே போர் தாக்குதலானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில் துருக்கியின் செயல்பாடு குறித்து துருக்கி நாட்டின் நாடாளுமன்றத்தில் எம்.பி ஹசன் பித்மெஜ்(53) காட்டமாக பேசி கொண்டு இருந்தார்.

அப்போது வரலாறு அமைதியாக இருந்தாலும், உண்மை எப்போதும் அமைதியாக இருக்காது என அவர் துருக்கி அரசை விமர்சிக்கும் வகையில் பேசினார்.

அத்துடன் இஸ்ரேலை குறிப்பிட்டு பேசிய அவர், எங்களை அகற்றி விட்டால் பிரச்சனை இருக்காது என அவர்கள் நினைக்கிறார்கள், ஆனால் தவறுகளின் துன்பத்தில் இருந்து தப்பிக்க முடியாது.

வரலாற்றில் இருந்து நீங்கள் தப்பி விட்டாலும், கடவுளின் கோபத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியாது என கோபத்துடன் பேசினார்.

மிகவும் ஆக்ரோஷமாக உரையாற்றி கொண்டு இருந்த எம்.பி ஹசன் பித்மெஜ்(53) உரையின் நடுவிலேயே நாடாளுமன்றத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு உருவானது, இந்த காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பு ஆகி கொண்டிருந்த நிலையில், எம்.பி ஹசன் பித்மெஜ் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கும் என கூறப்படும் நிலையில், அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக துருக்கி சுகாதார அமைச்சர் பரெத்தீன் கோகா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...