6 8 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Share

அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதனை தொடர்ந்து விவேக் ராமசாமியையும் அவரின் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய உள்ளதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.

டைலர் அன்டர்சன் (Tyler Anderson)என்ற நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்த நபரின் அனுப்பிய குறுஞ்செய்திகளில் கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது.

விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகளுக்கு குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றதையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணும் கைது செய்தவரின் தொலைபேசி எண்ணும் தொடர்புபட்டதை தொடர்ந்தே அவர் கைத செய்யப்பட்டுள்ளார்.

மேலும், விரைந்த செயற்பட்டு அவரை கைது செய்த சட்ட நடைமுறையாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட ஆண்டர்சன் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைமூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் என்பவற்றை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
af522c79 ms3g0pcm6uei4b50d8z7a
செய்திகள்உலகம்

இங்கிலாந்து திருச்சபையின் வரலாற்றில் முதல் பெண் பேராயர்: சாரா முல்லாலி உத்தியோகபூர்வமாக உறுதி!

இங்கிலாந்து திருச்சபையின் (Church of England) 106-வது கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி (Sarah Mullally)...

nipah virus warning dont do this alone health department advice 850x565
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிபா வைரஸ் அச்சம் தேவையில்லை: இலங்கைக்குப் பரவும் அபாயம் மிகக் குறைவு என அனில் ஜாசிங்க உறுதி!

இலங்கையில் நிபா (Nipah) வைரஸ் பரவும் அபாயம் தற்போது மிகக் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகச் சுகாதார...

Keheliya Rambukwella 696x397 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கெஹெலியவின் ரூ. 748 மில்லியன் மோசடி விவகாரம்: பணமோசடி வழக்கில் தொழிலதிபர் ஒருவருக்கு விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாரிய பணமோசடி விசாரணை தொடர்பில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்...

26 697304b4809de
செய்திகள்உலகம்

உலக வரலாற்றில் முதல் முறை: 5,500 அமெரிக்க டொலர்களைக் கடந்து தங்கம் விலை அதிரடி உயர்வு!

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதன்முறையாக 5,500 அமெரிக்க...