உலகம்செய்திகள்

புலம்பெயர்தலை தடுப்பதற்காக பிரித்தானியா விரயம்

Share
tamilni 136 scaled
Share

புலம்பெயர்தலை தடுப்பதற்காக பிரித்தானியா விரயம்

சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் வகையில் பிரித்தானியாவால் பெருமளவிலான பணம் செலவளிக்கப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் சட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிற்குள் நுழையும் சட்டவிரோத குடியேறிகளை ருவாண்டாவுக்கு இடமாற்றம் செய்யும் திட்டமானது 2022ல் அறிவிக்கப்பட்டது.

இதனை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் முன்னெடுத்திருந்தார். ஆனால் இந்த திட்டத்தில் இதுவரை ஒருவர் கூட ருவாண்டாவுக்கு அனுப்பப்படவில்லை.

ஆனால் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே 140 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 மில்லியன் பவுண்டுகள் ருவாண்டாவுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டமானது முற்றிலும் தோல்வியை சந்திக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை மட்டுமின்றி, அந்நாட்டு அரசியல் பிரமுகர்களும் கடும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.

ஆனால் ருவாண்டாவுக்கு அளித்துள்ள 240 மில்லியன் பவுண்டுகள் என்பது பிரித்தானியா அரசாங்கத்திற்கு ஒருபோதும் இழப்பல்ல எனவும், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான குடியிருப்புகளுக்கு செலவிடப்படும் தொகையானது இனி சேமிப்பாக மாறும் எனவும் பிரித்தானிய அரசாங்ஙம் பதிலளித்துள்ளது.

மேலும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக 8 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா செலவிட்டு வந்துள்ளதாகவும், இனி அப்படியான செலவுகள் இருக்காது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...