4 7 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் தந்தை வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்: அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்

Share

பிரித்தானியாவில் 7 வயது சிறுவனின் தந்தை வெளியிட்ட உருக்கமான வேண்டுகோள்: அடையாளங்களை வெளியிட்ட பொலிஸார்

பிரித்தானியாவில் 7 வயது மகன் மீது காரை ஏற்றி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சாரதி குறித்து தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு சிறுவனின் தந்தை கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பிரித்தானியாவின் கென்ட்(Kent) பகுதியில் தன்னுடைய 7 வயது மகன் வில்லியம் பிரவுன் மீது காரை இடித்து விட்டு தப்பிச் சென்ற சாரதி குறித்து தெரிந்தவர்கள் உடனடியாக அவரை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு அவரது தந்தை வில்லியம் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை மாலை 5.35 மணியளவில் கென்ட்டின், ஃபோக்ஸ்டோன்(Folkestone) சாண்ட்கேட் எஸ்பிளனேட்(Sandgate Esplanade) பகுதியில் 7 வயது சிறுவன் வில்லியம் பிரவுன் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

பின்னர், இந்த விபத்தில் சிறுவன் வில்லியம் பிரவுன் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது. தந்தை வேண்டுகோள் இந்நிலையில் சிறுவனின் கால்பந்து ஜெர்சியுடன் தந்தை உருக்கமாக பேசி KentOnline வெளியிட்டு இருந்த வீடியோவில், என் மகன் மீது காரை ஏற்றி விட்டு தப்பிச் சென்ற நபர் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு தெரியப்படுத்துங்கள்.

ஒருவேளை அது நீங்களாகவே இருந்தால், சிறுவன் வில்லியம் பிரவுன் மிகவும் அழகான சிறுவன், அத்துடன் அனைத்தையும் மன்னிக்கும் பண்பு கொண்டவர், எனவே உங்களை நாங்கள் ஏற்கனவே மன்னித்து விட்டோம், ஆனால் எங்களுடைய மகனுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எங்களுக்கு தெரிய வேண்டும் என பேசியுள்ளார்.

இதற்கிடையில் ப்ராஸ்பெக்ட் சாலை விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றது சிவப்பு Citroen கார் என்றும், கார் ஆனது Hythe நோக்கி சென்றதாகவும் விவரங்களை வெளியிட்டு, விவரம் அறிந்தவர்கள் உடனடியாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...