3 scaled
உலகம்செய்திகள்

கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?

Share

கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?

இந்திய மாநிலமான கேரளாவில், இஸ்ரேலிய பெண் ஒருவர் கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன். இவர் ஒரு யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (36) என்ற பெண் ஒருவர் வந்திருந்தார்.

இதில் ஸ்வத்வா, கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கியிருந்து யோகா கற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் கழுத்தறுத்து நிலையில் சடலமாக ஸ்வத்வா கிடந்துள்ளார். அதேபோல, யோகா ஆசிரியர் கிருஷ்ண சந்திரனும் கழுத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஸ்வத்வாவின் உடலை மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த கிருஷ்ண சந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்துவிட்டு கிருஷ்ண சந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கிருஷ்ண சந்திரன் பணியாற்றிய போது, ஸ்வத்வாவை கேரளாவுக்கு தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...