உலகம்செய்திகள்

கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?

Share
3 scaled
Share

கேரளாவில் இஸ்ரேலிய பெண் சடலமாக மீட்பு.., யோகா ஆசிரியரால் நடந்த விபரீதமா?

இந்திய மாநிலமான கேரளாவில், இஸ்ரேலிய பெண் ஒருவர் கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள கொல்லத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ண சந்திரன். இவர் ஒரு யோகா ஆசிரியர். இவரிடம் யோகா கற்பதற்காக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ஸ்வத்வா (36) என்ற பெண் ஒருவர் வந்திருந்தார்.

இதில் ஸ்வத்வா, கிருஷ்ண சந்திரனின் உறவினர் வீட்டில் தங்கியிருந்து யோகா கற்று வந்தார். இந்நிலையில், நேற்று மாலை வீட்டில் கழுத்தறுத்து நிலையில் சடலமாக ஸ்வத்வா கிடந்துள்ளார். அதேபோல, யோகா ஆசிரியர் கிருஷ்ண சந்திரனும் கழுத்தில் காயங்களுடன் கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்தவுடன், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் ஸ்வத்வாவின் உடலை மீட்டனர். படுகாயங்களுடன் இருந்த கிருஷ்ண சந்திரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஸ்வத்வாவை கொலை செய்துவிட்டு கிருஷ்ண சந்திரன் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கிருஷ்ண சந்திரன் பணியாற்றிய போது, ஸ்வத்வாவை கேரளாவுக்கு தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...