7 9 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதம்..இதுதான் ஒரே வழி – ஜோ பைடன்

Share

இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதம்..இதுதான் ஒரே வழி – ஜோ பைடன்

இரு நாடு தீர்வு என்பதே இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும், நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு ஒரே வழியாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரின் இடையே நான்கு நாட்கள் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.

மூன்றாவது நாளில் 17 பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதேபோல் இஸ்ரேல் 39 பாலஸ்தீன மக்களை விடுவித்தது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்கள் என இருவருக்கும் நீண்டகால பாதுகாப்புக்கான உத்தரவாதம் வழங்குவதற்கு இரு நாடு தீர்வே ஒரே வழியாக இருக்கும்.

இருதரப்பு மக்களும், சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை சம அளவில் பெற்று வாழ்வது உறுதி செய்யப்பட வேண்டும். இந்த இலக்கை நோக்கிய பணியை நாங்கள் கைவிடமாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...