3 12 scaled
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோரை கடத்தும் கும்பல்: ஜேர்மனியில் இருவர் கைது

Share

புலம்பெயர்ந்தோரை கடத்தும் கும்பல்: ஜேர்மனியில் இருவர் கைது

ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜேர்மன் தலைநகர் பெர்லினில் ஆறு இடங்களிலும், Lower Saxonyயில் எட்டு இடங்களிலும், சுமார் 260 அதிகாரிகள் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தொடர்பில் ரெய்டுகள் நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து, நேற்று, அதாவது வியாழக்கிழமை, இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களில், 23 வயது நபர் ஒருவர் பெர்லினைச் சேர்ந்தவர், Garbsen என்னுமிடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மற்றவர் 40 வயது நபர், அவர் Lehrte என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள், ஆட்கடத்தல் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அந்தக் கடத்தல் கும்பலில் பலர் ஈராக்கியர்கள். அவர்கள் 208 புலம்பெயர்வோரை, பெரும்பாலும் சிரியாவிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த புலம்பெயர்வோர், ஆளுக்கு 4,000 முதல் 5,000 யூரோக்கள் வரை கடத்தல்காரர்களுக்கு செலுத்தியுள்ளார்கள். ஆனாலும், கடத்தல்காரர்கள் அந்த புலம்பெயர்வோரை மனிதர்கள் பயணிப்பதற்கு உகந்ததல்லாத வாகனங்களில் ஆடுமாடுகளைப் போல அடைத்துக்கொண்டு வந்துள்ளார்கள். வழியில் அவர்களுக்கு உணவோ ஓய்வோ கூட கொடுக்கப்படவில்லையாம்.

அந்தப் புலம்பெயர்வோர், ஹங்கேரி, ஆஸ்திரியா, செக் குடியரசு வழியாக ஜேர்மனிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள்.

சமீபத்தில் ஜேர்மனி, போலந்து, செக் குடியரசு மற்றும் சுவிட்சர்லாந்துடனான தனது எல்லைகளில் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் வகையில் சோதனைகள் மேற்கொள்ளத் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...