5 10
உலகம்செய்திகள்

லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் மேலும் ஒருவர் கைது

Share

லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் மேலும் ஒருவர் கைது

மேற்கு லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞர் படுகொலையில் ஏற்கனவே மூவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது 71 வயதான நாலாவது நபர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு லண்டனில் 17 வயதான இந்திய வம்சாவளி சீக்கிய இளைஞர் Simarjeet Singh கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். தகவலை அடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், படுகாயங்களுடன் இளைஞரை மீட்டுள்ளனர்.

ஆனால் காயங்கள் காரணமாக சம்பவயிடத்திலேயே இளைஞர் Simarjeet Singh மரணமடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்திருந்தது. இந்த வழக்கு விசாரணையில் Southall பகுதியை சேர்ந்த 21 வயது அமந்தீப் சிங், 27 வயது மஞ்சித் சிங், மற்றும் 31 வயது அஜ்மீர் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது கொலை வழக்கும் பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில், 71 வயதான போரன் சிங் என்பவரை கைது செய்துள்ள பொலிசார், அவர் மீது கொலை வழக்கு பதிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியானது மிகவும் அமைதியான, இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலத்தில் நடந்ததில்லை எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இளைஞரின் அலறல் சத்தம் கேட்டு பலர் கண்விழித்துள்ளதாக கூறியுள்ளனர்.

அவர்களே பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். 17 வயதேயான Simarjeet Singh மீது குழு சேர்ந்து தாக்குதல் முன்னெடுத்துள்ளதன் பின்னணி குறித்தும் விசாரிக்கப்படும் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் மேலும் தகவல் தெரியவரும் பொதுமக்கல் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என பொலிஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...