rtjy 137 scaled
உலகம்செய்திகள்

கடலில் மூழ்கப் போகும் நாடு

Share

கடலில் மூழ்கப் போகும் நாடு

பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறைகள் நிரம்பிய சிறு தீவுகளை உள்ளடக்கிய டுவாலு (Tuvalu) எனும் நாடு நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

அதிகரிக்கும் உலக வெப்பமயமாதல், டுவாலுவுக்கு ஒரு சவாலாக இருந்து வருகிறது. உயரமான அலைகளாலும், கடல்நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வருவதாலும் அங்கு வாழும் மக்களின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறியுள்ளது.

டுவாலாவின் தலைநகரமான ஃபுனாஃபுயுட்டி (Funafuti) பகுதி, 50 சதவீதம் விரைவில் நீரில் மூழ்கி விடும் என்றும் 2100 வருடத்திற்குள் 95 சதவீத நாடு நீருக்கடியில் சென்று விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

தற்போது டுவாலு கடல் மட்டத்தை விட 15 அடி உயரத்தில் மட்டுமே இருப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதும் குறைவடைந்து விட்டது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் (Anthony Albanese) டுவாலு மக்களுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம் அளிக்கும் ஒப்பந்தம் ஒன்றை டுவாலு பிரதமர் காசியா நாடானோ (Kausea Natano) உடன் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், டுவாலு நாட்டிற்கு இராணுவ பாதுகாப்பையும் அவுஸ்திரேலியா வழங்க ஒப்பு கொண்டுள்ளதுடன் ஆண்டுதோறும் டுவாலு நாட்டு குடிமக்கள் 300 பேருக்கு அவுஸ்திரேலியாவில் தங்கி படித்து, வேலை செய்ய அனுமதி அளிக்கும் விசா வழங்கப்பட உள்ளது.

Share
தொடர்புடையது
23 64ddc497a7984
செய்திகள்இலங்கை

காலி மாவட்டத்தில் 30 மணிநேர நீர் விநியோகத் தடை: நாளை முதல் அமுல்!

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (அக்டோபர் 20) முதல் 30 மணிநேர நீர் விநியோகத்...

25 68f4bb8d53816
செய்திகள்இலங்கை

ரஃபா மற்றும் தெற்கு காசாவில் தாக்குதல்கள் தொடர்ச்சி; வடக்கு காசாவில் பலி

இஸ்ரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) மற்றும் தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும்...

2.1 2
செய்திகள்இந்தியா

இலங்கையின் சிறைச்சாலைகளில் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைப்பு

இலங்கையின் முக்கிய சிறைச்சாலைகளில் தற்போதைக்கு சுமார் 826 மரண தண்டனைக் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள்...

PoliceOfficerRepImage750
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள் அதிகரிப்பு!

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவிகள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...