tamilni 141 scaled
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து: கனேடியர்கள் கோபம்

Share

அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து: கனேடியர்கள் கோபம்

அமெரிக்க ஜனாதிபதி போட்டியிலிருக்கும் இந்திய வம்சாவளியினர் ஒருவர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள், கனேடியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.

அவருடைய பெயர், விவேக் கணபதி ராமசாமி (38). விவேக் ராமசாமி என அழைக்கப்படும் அவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார், அவர் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.

அமெரிக்கக் குடிமகனான விவேக் ராமசாமியின் பெற்றோர் கேரளாவைச் சேர்ந்த தமிழ் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

பாலக்காடு என்னுமிடத்திலிருந்து புலம்பெயர்ந்த கணபதி, கீதா ராமசாமியின் மகனான விவேக் ராமசாமியின் மனைவி அபூர்வா, ஒரு மருத்துவர். தம்பதியருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

எதிரெதிர் அணியிலிருந்தாலும், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு ஆதரவு தெரிவிப்பவர் விவேக் ராமசாமி.

தற்போது விவேக் ராமசாமி தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய ஒரு கருத்து கனேடியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலை நாடுகளில் புலம்பெயர்தலுக்கெதிராக கருத்துத் தெரிவிப்பவர்களில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களும் இருக்கிறார்கள்.

பிரித்தானியாவில், பிரீத்தி பட்டேல், ரிஷி சுனக், சுவெல்லா பிரேவர்மேன் என அந்த வரிசையில், இந்திய வம்சாவளியினரான விவேக் ராமசாமியும் இணைந்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான விவாத மேடை ஒன்றில் பேசிய விவேக் ராமசாமி, அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான எல்லையில் தடுப்புச் சுவர் ஒன்றைக் கட்டியெழுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

போதை மருந்துகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக அவர் இந்த யோசனையைத் தெரிவித்துள்ளார்.

அவரது இந்த யோசனை, கனேடியர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அமெரிக்காவிலும் அவரது கருத்துக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விடயம் என்னவென்றால், அமெரிக்கா கனடாவுக்கிடையிலான எல்லை, 8,900 கிலோமீற்றர் நீளமுடையது. உலகிலேயே மிக நீளமான எல்லைப்பகுதி இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...