7 4 scaled
உலகம்செய்திகள்

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

Share

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

நைஜீரியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் வெடிகுண்டு வெடித்து இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கனடா விசாரணை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை அடுத்து கனடாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் வெடிப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டு, இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணை முன்னெடுக்கபப்ட்டு வருவதாகவும் அமைச்சர் ஜோலி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நைஜீரிய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளரும் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி டினுபு இறந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்பதோடு காயமடைந்த அனைவரும் விரைவாகவும் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறார் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...