7 4 scaled
உலகம்செய்திகள்

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

Share

ஆப்பிரிக்க நாடு ஒன்றிற்கு பயண எச்சரிக்கை விடுத்த கனடா

நைஜீரியாவில் உள்ள கனேடிய தூதரகத்தில் வெடிகுண்டு வெடித்து இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கனடா விசாரணை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவுக்கு அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்காவை அடுத்து கனடாவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நைஜீரியாவில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தில் வெடிப்பு ஏற்பட்டதை உறுதி செய்துள்ளதாகவும், தீ அணைக்கப்பட்டு, இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்பதை அறிய விசாரணை முன்னெடுக்கபப்ட்டு வருவதாகவும் அமைச்சர் ஜோலி சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நைஜீரிய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளரும் நடந்த சம்பவத்தை உறுதி செய்துள்ளதுடன், மேலதிக தகவல்களை வெளியிட மறுத்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி டினுபு இறந்தவர்கள் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திப்பதோடு காயமடைந்த அனைவரும் விரைவாகவும் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறார் என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...