6 2 scaled
உலகம்செய்திகள்

IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

Share

IT, ED எல்லாம் பாஜகவின் அணிகள்: தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அதிகாலை முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி, சென்னை தி.நகர், அண்ணா சாலை, கீழ்பாக்கம், வேப்பேரி, ஆகிய இடங்களில் 30க்கும் மேற்பட்ட கார்களில் சென்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தி.மு.க அரசு சார்பாக சென்னையில் நீட் விலக்கு தொடர்பாக தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எல்லாம் பாஜகவின் அணிகள் என்று விமர்ச்சித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2,3 மாதங்களாக பாஜக அணிகள் செயல்பாடு அதிகரித்து வருவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார்.

நீட் விலக்கு என்பது தமிழக மாணவர்களுக்கான உரிமை என்பதால் கூட்டணி கட்சி தலைவர்களிடமும் கையெழுத்து பெற்று வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...