லண்டன் சுரங்கப்பாதையில் பெண் மீது மோதிய 2 ரயில்கள்: பயங்கர சம்பவத்தின் பின்னணி
லண்டன் சுரங்கப்பாதையில் அடுத்தடுத்து இரண்டு ரயில் மோதி கை மற்றும் காலை இழந்த பிரித்தானிய தாய் ஒருவர் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறால் வருந்துகிறார்.
வடக்கு லண்டனில் உள்ள உயர் பார்னெட் சுரங்க ரயில் நிலையத்தின் நடைபாதையில் இருந்து தவறி விழுந்து, சாரா டி லகார்டே(Sarah de Lagarde) என்ற பிரித்தானிய தாய் தன்னுடைய தவிர்த்திருக்க கூடிய தவறினால் கை மற்றும் காலை இழந்து வாழ்க்கையில் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.
செப்டம்பர் 2022ம் ஆண்டு ரயில் நிலையத்தின் நடைப்பாதைக்கும், நிலையான ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே தவறி விழுந்தார்.
இதனால் அவருக்கு மூக்கு மற்றும் இரண்டு பற்கள் உடைந்தது, துரதிஷ்டவசமாக அவர் தவறி விழுந்ததை யாரும் கவனிக்க தவறிவிட்டனர்.
நடைப்பாதைக்கும், ரயிலுக்கும் இடையே சாரா டி லகார்டே சிக்கி கொண்டு இருக்கும் போதே ரயில் புறப்பட்டதால், சாரா டி லகார்டே தன்னுடைய கைகளை இழந்தார்.
பயங்கர கூச்சலிட்ட பிறகும் யாரும் சாரா டி லகார்டே-வை கவனிக்க தவறியதால் இரண்டாவதாக வந்த ரயில் அவரது காலை துண்டாக்கியது.
கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு பிறகே நபர் ஒருவர் அலாரத்தை ஒலிக்க செய்து, அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டனர்.
இந்த மொத்த சம்பவம் நிகழும் போது சுயநினைவுடன் இருந்த சாரா டி லகார்டே வீட்டிற்கு திரும்பி விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு இருந்ததாக டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மனக்கண்களில், அவருடைய இரண்டு மகள்கள் தெரிந்ததாகவும், அவர்கள் தன்னை அம்மா நீங்கள் வீட்டிற்கு வர வேண்டும் என்று தெரிவித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.