tamilni 370 scaled
உலகம்செய்திகள்

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

Share

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி ஒருவர் பதவியேற்கும் முன்பே, அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், மக்கள் புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதைக் காட்டின.

அதனால், ஜேர்மன் அரசியலில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. ஆளுங்கட்சியினரே, புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கைகளைத் துவங்க இருப்பதாக அறிவிக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்
இந்நிலையில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றவரான வலதுசாரிக் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Alternative for Germany Party (AfD) என்னும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரான Daniel Halemba (22) என்னும் அரசியல்வாதிக்கு எதிராகத்தான் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதற்காக அவருக்கு எதிராக கைது வாரண்ட் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை, சரணடையவும் இல்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், அமைச்சர்கள் தண்டனை போன்ற விடயங்களிலிருந்து தப்பமுடிவும். ஆனால், Daniel இன்னமும் அமைச்சராக பதவியேற்கவில்லை. ஆகவே, அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வாரா, அல்லது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...