2 18 scaled
உலகம்செய்திகள்

பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! விசாரணையில் அதிர்ச்சி

Share

பணியில் இருக்கும்போதே சரிந்து விழுந்த காவலர்! விசாரணையில் அதிர்ச்சி

அமெரிக்காவில் காவலர் ஒருவர் வலி நிவாரணி மருந்தை அதிகளவில் உட்கொண்டதில் உயிரிழந்தார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் ஆக பணியாற்றி வந்தவர் ரிச்சர்ட் கேலி (54).

இவர் தனது அலுவலகத்தில் பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

அதில் கெல்லி Fentanyl மற்றும் methamphetamine ஆகியவற்றை உட்கொண்டதால் உயிரிழந்ததாக தெரிய வந்தது.

இதன்மூலம் அவர் போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என உயரதிகாரி ஃபோர்ட் தெரிவித்தார். மேலும், அவரது கருத்துக்கள் மற்றும் காவல்துறை கண்டுபிடித்ததன் மூலம், கெல்லி மரணத்திற்கு முன்பு போதைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

Fentanyl என்பது ஒரு சக்திவாய்ந்த நரம்புவழி மயக்க மருந்தாக அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பின்னர் தோல் இணைப்பு மற்றும் வலி நிவாரணத்திற்கான கலவையாக இது உருவாக்கப்பட்டது. அதேபோல் Methamphetamine என்பது சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருளாகும்.

இவற்றில் Fentanylஐ அதிகளவில் எடுத்துக் கொள்வது கோகையின், ஹெராயின் போன்ற கடினமான போதைப்பொருட்களை எடுத்துக் கொள்வதற்கு சமம் ஆகும்.

கடந்த ஆண்டில், குற்றம் நடந்த இடத்தில் Fentanyl-ஐ கையாள்வதால் பல காவலர்கள் அபாயகரமான, அளவுக்கதிகமான அளவுகளை அனுபவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த மருந்துடன் தோல் தொடர்பு மட்டும் உடனடியாக அதிகப்படியான அளவை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...