1 14 scaled
உலகம்செய்திகள்

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

Share

22 பேர்களை பலிவாங்கிய துப்பாக்கிதாரியின் அடையாளம் : வெளிவரும் புதிய தகவல்

அமெரிக்காவில் மைனே மாகாண மக்களை மொத்தமாக நடுக்கத்தில் ஆழ்த்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 60 பேர்கள் வரையில் காயங்களுடன் தப்பியுள்ளனர். சம்பவயிடத்தில் இருந்து மாயமாகியுள்ள துப்பாக்கிதாரியை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த Lewiston நகரில் கடைகள் அடைக்கப்பட்டு, வீடுகளின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன.

ஒரு பொழுதுபோக்கு மையம், ஒரு பந்துவீச்சு மையம், மற்றும் ஒரு மதுபான விடுதி ஆகியவற்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகும் மாகாணம் மொத்தம் பீதியில் உறைந்துள்ளது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 40 வயதான Robert Card என்பதை அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளனர்.

மேலும், அவர் ஒரு பயிற்சி பெற்ற துப்பாக்கி பயிற்றுவிப்பாளர் எனவும், அமெரிக்க இராணுவ ரிசர்வ் உறுப்பினர் எனவும், அவர் 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஓய்வு பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மட்டுமின்றி, கோடையில் அவர் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...