உலகம்செய்திகள்

அதானிக்கு Blank Check கொடுத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி: ராகுல் காந்தி ஆவேசம்

Share

அதானிக்கு Blank Check கொடுத்துள்ளார் இந்திய பிரதமர் மோடி: ராகுல் காந்தி ஆவேசம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ஆவேசமாக பேசியுள்ளார்.

இந்திய தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி அத்தானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். இந்தியாவின் அனைத்து துறைகளிலும் உள்ள இந்திய குடிமக்களின் வருமானமும் அதானிக்கு பங்காக சென்று கொண்டிருக்கிறது.

அதற்கு, பிரதமர் மோடி துணை நின்று கொண்டிருக்கிறார். அதானி குழுமத்தின் நிலக்கரி முறைகேட்டால் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி இந்தியாவில் பலமடங்காக அதானி குழுமம் விற்பனை செய்கிறது. அவர்களை பிரதமர் பாதுகாப்பதால் தான் இவை நடக்கின்றன. இது குறித்து பிரதமர் இன்னும் வாய் திறக்கவில்லை.

இதன் பின்னணியில் இருக்கும் முறைகேடுகளை இந்திய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி மக்களின் நம்பகத்தன்மையை இழந்து கொண்டு வருகிறார். இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் ரூ.12 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது.

இதன் பின்னால் அதானி இருக்கிறார் என்பதை லண்டனில் உள்ள பைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது” என்று கூறினார்

Share
தொடர்புடையது
25 68f495a7c6b1e
செய்திகள்இலங்கை

அரச கிளவுட் செயலிழப்பு: பல அரச இணைய சேவைகள் பாதிப்பு!

இலங்கை அரச கிளவுட் (Lanka Government Cloud – LGC) சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பச் செயலிழப்பு...

IMG 20241217 095933 800 x 533 pixel
செய்திகள்இலங்கை

தேசிய மக்கள் சக்தி சார்பில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைப்பதற்கான...

AP20222207925030
செய்திகள்இலங்கை

“மக்களுடனான பிணைப்பே ஆரோக்கியத்தின் ஆதாரம்” – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

தங்காலை, கால்டன் இல்லத்தில் இருந்தவாறு தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

BIA 692136
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம் – பயணிகளுக்கு கிடைத்துள்ள நன்மை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, பிரத்தியேகமாக தானியங்கி...