உலகம்செய்திகள்

பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளைஞர்..காத்திருந்த அதிர்ச்சி

23 652a7ac60704b
Share

பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளைஞர்..காத்திருந்த அதிர்ச்சி

இந்திய மாநிலம் அரியானாவில் இளைஞர் ஒருவர், டேட்டிங் ஆப் மூலம் பழகிய இளம்பெண்ணால் தனது செல்போன் உட்பட 1.78 லட்சம் பணத்தை பறிகொடுத்துள்ளார்.

அரியானாவின் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரோகித் குப்தா. இவர் ஒன்லைனில் செயலி ஒன்றின் மூலம் சாக்ஷி எனும் பெண்ணை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

இவர்களது சாட்டிங் நட்பு பல நாட்கள் நீடித்துள்ளது. இந்நிலையில் ரோகித்தை காண நேரில் வருவதாக சாக்ஷி கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ரோகித், கடந்த 1ஆம் திகதி இரவு சாக்ஷியை நேரில் சந்தித்துள்ளார்.

இரவுவேளையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவரும் மதுபானம் வாங்கிக் கொண்டு ரோகித்தின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மதுபானத்தில் கலக்க ஐஸ் வேண்டும், போய் எடுத்து வா என சாக்ஷி கூற ரோகித்தும் சமையலறைக்கு சென்று எடுத்து வந்துள்ளார்.

விலையுயர்ந்த பொருட்களுடன் மயமான பெண்
பின்னர் இருவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. ஆனால் ரோகித் உடனே மயங்கி விழுந்துள்ளார். காலையில் எழுந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

தன்னுடைய தங்க சங்கிலி ஆப்பிள் ஐபோன், ரூ.10,000 மற்றும் கிரெடிட், டெபிட் கார்டுகள் அனைத்து திருடப்பட்டிருந்ததை அறிந்து கலக்கமடைந்தார்.

மேலும், அவரது வங்கிக்கணக்கில் இருந்து 1.78 லட்சம் ரூபாயும் எடுக்கப்பட்டுள்ளதை அறிந்தார். அதனைத் தொடர்ந்து சாக்ஷி மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...