coping with Patient death
உலகம்செய்திகள்

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

Share

தந்தையுடன் சேர்ந்து மனைவியை அடித்தே கொன்ற கணவன்!

இந்திய மாநிலம் உத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை தனது தந்தையுடன் சேர்ந்து கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஜஜ்மன்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ். இவருக்கும் அனிதா (22) என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் திருமணம் நடந்தது.

அதன் பின்னர் சூரஜ் தன் மனைவியை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளார். அவர் மட்டும் இல்லாமல் மொத்த குடும்பமும் இருசக்கர வாகனம் கேட்டு அனிதாவை தொல்லை செய்துள்ளனர்.

தொடர் துன்புறுத்தலுக்கு ஆளான அனிதா கொல்லப்பட்டுள்ளார். அவரது கணவர் சூரஜ் தனது தந்தையுடன் சேர்ந்து அடித்து கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் அவரது உடலை வீட்டிற்கு அருகிலேயே புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மோப்ப நாய் உதவியுடன் அனிதாவின் உடலைக் கைப்பற்றியுள்ளார்.

பொலிஸார் தேடுதல் வேட்டை பின்னர் அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதனையடுத்து தப்பியோடிய சூரஜ் குடும்பத்தினரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் மீது வரதட்சணை, துன்புறுத்தல் மற்றும் கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வரதட்சணைக்காக இளம்பெண் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...