23 652a92e42a39a
உலகம்செய்திகள்

இரண்டு திருமணம் செய்யவில்லை எனில் சிறை? விசித்திரம் சட்டம்

Share

இரண்டு திருமணம் செய்யவில்லை எனில் சிறை? விசித்திரம் சட்டம்

வடகிழக்கு நாடான எரித்திரியாவில் ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால், சிறை தண்டனை அளிக்கும் வினோத சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக பரவிய தகவல் விவாத பொருளாகியுள்ளது.

எரித்திரியா நாட்டில் உள்நாட்டுப் போர் காரணமாக ஆண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக மக்கள் தொகை விகிதத்தை சரிவிகிதத்தில் கொண்டுவர வேண்டிய கட்டாயம் எரித்திரிய அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இதனை சரி செய்ய புதிதாக சட்டம் ஒன்று இயற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளாதாக செய்தி ஒன்று உலா வருகிறது. இதுதான் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

அதாவது ஒரு ஆண் குறைந்தது 2 பெண்களையாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்யாவிடில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த சட்டம் கூறுவதாக பரவும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தற்போது இணையத்தில் வைரலாகிய நிலையில், பலரும் memes தயார் செய்து கிண்டலுடன் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இந்த செய்தி பொய்யானது என்று பிபிசியின் அறிக்கை கூறுகிறது.

அந்நாட்டில் எந்த சட்டமும் ஆண்கள் இரு திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் சிறை என்று விதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...