23 65213a7f09ae0
உலகம்செய்திகள்

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: ஆசிரியர்கள் குழம்பும்

Share

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: ஆசிரியர்கள் குழம்பும்

இந்திய மாநிலம், கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் 5 இரட்டையர்கள் படிப்பதால், அடையாளம் காண முடியாமல் ஆசிரியர்கள் குழம்புகின்றனர்.

கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர்.

அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர். 2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கின்றனர். இந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரட்டையர்களால், அவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது. இவர்களின், பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், தினமும் போராடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர். தற்போது, இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
17 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரப் பதிவு: சிக்கல்களைத் தீர்க்க புதிய WhatsApp சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக (National Fuel Pass) பதிவு செய்யும் போது தொழில்நுட்பச் சிக்கல்களை எதிர்கொள்ளும்...

16 17
உலகம்செய்திகள்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீண்டும் இலங்கைக்கு நேரடி விமான சேவை: அக்டோபர் 2026 முதல் ஆரம்பம்!

பிரிட்டனின் தேசிய விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ் (British Airways), எதிர்வரும் குளிர்காலப் பருவம் முதல்...

15 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாணவிகளை அவதூறு செய்த மாணவன் மற்றும் தாக்குதல் நடத்திய தந்தை ஆகியோருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம், வேலணைப் பகுதியில் பாடசாலை மாணவிகளைச் சமூக ஊடகங்கள் வாயிலாக அவதூறு செய்த மாணவன் ஒருவரை...

14 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: ரூ. 1,945 இலட்சம் மீளப் பெற்றுக்கொடுப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து சுமார் 1,945 இலட்சம்...