23 65213a7f09ae0
உலகம்செய்திகள்

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: ஆசிரியர்கள் குழம்பும்

Share

ஒரே வகுப்பில் படிக்கும் 5 இரட்டையர்கள்: ஆசிரியர்கள் குழம்பும்

இந்திய மாநிலம், கர்நாடகாவில் உள்ள ஒரு பள்ளியில் ஒரே வகுப்பில் 5 இரட்டையர்கள் படிப்பதால், அடையாளம் காண முடியாமல் ஆசிரியர்கள் குழம்புகின்றனர்.

கர்நாடக மாநிலம் பந்துவால் தாலுகாவில் உள்ள சஜிபமுடாவில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், வரலாறு காண முடியாத அளவுக்கு அதிகமான இரட்டையர்கள் படித்து வருகின்றனர்.

அந்தவகையில், 9-ம் வகுப்பில் 62 மாணவர்கள் உள்ளனர். இதில், 5 இரட்டையர்கள் படிக்கின்றனர். 2010-11 -ம் ஆண்டு பிறந்த பாத்திமா ரவுலா-ஆயிஷா ரைஃபா, ஹலிமத் ரஃபியா-துலைகத் ரூபியா, பாத்திமா கமிலா-பாத்திமா சமிலா, கதீஜா ஜியா-ஆயிஷா ஜிபா, ஜான்வி-ஷ்ரனாவி ஆகிய இரட்டையர்கள் பார்ப்பதற்கு ஒரே போல இருக்கின்றனர். இந்த 5 இரட்டையர்களும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரட்டையர்களால், அவர்களை அடையாளம் காண்பதற்கு ஆசிரியர், ஆசிரியைகளுக்கு கடும் சவாலாக இருக்கிறது. இவர்களின், பெயர்களை ஆசிரியர்கள் நினைவு வைத்திருந்தாலும், தினமும் போராடுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், சக மாணவர்களும் எங்களை அடையாளம் காண்பதற்கு சிரமப்படுகின்றனர் என இரட்டையர்கள் கூறுகின்றனர். தற்போது, இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....