உலகம்செய்திகள்

ஹிஜாப் விதிகளால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இன்னொரு இளம் பெண்

Share
7 2 scaled
Share

ஹிஜாப் விதிகளால் கோமா நிலைக்கு தள்ளப்பட்ட இன்னொரு இளம் பெண்

ஈரானில் ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை என கூறி இளம் பெண் ஒருவரை பெண் பொலிசார் தாக்கியதில் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெஹ்ரான் சுரங்க ரயில் நிலையத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் 16 வயதேயான Armita Garawand என்பவர் கோமா நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார்.

குறித்த இளம்பெண் சிறப்பு பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்றே சமூக ஆர்வலர்கள் குழு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது என விளக்கமளித்துள்ள ஈரான் நிர்வாகம்,

குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக அந்த இளம்பெண் மயங்கி விழுந்தார் எனவும், சிறப்பு பாதுகாப்பு படையினரின் தலையீடு எதுவும் இந்த விவகாரத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மட்டுமின்றி, ஓராண்டுக்கு முன்னர் இதேப்போன்று ஹிஜாப் விதிகளை பின்பற்றவில்லை என குறிப்பிட்டு கைது செய்யப்பட்ட Mahsa Amini என்ற இளம்பெண் பொலிஸ் காவலில் மரணமடைய, அந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன்,

போராட்டம் ஆர்ப்பாட்டம் என ஈரான் மொத்தம் பல மாதங்கள் ஸ்தம்பித்தது. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பலர் தற்போது சிறையில் உள்ளனர்.

அது போன்ற ஒரு நெருக்கடி நிலை ஏற்படாதவாறு தற்போது Armita Garawand விவகாரத்தை முடித்துவைக்க ஈரான் முயற்சி முன்னெடுத்துள்ளது. ஆனால் சமூக ஆர்வலர்கள் குழுவினர், இந்த விவகாரத்தின் உண்மை நிலை மக்களை சென்று சேர வேண்டும் என கூறுகின்றனர்.

அறநெறிப் பொலிஸ் என்று அழைக்கப்படுபவர்களால் கைது செய்யப்பட்டு உடல்ரீதியாக தாக்கப்பட்ட பின்னர் கரவண்ட் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.

மேலும், கடுமையான பொலிஸ் காவலில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், குடும்பத்தினர் உட்பட எவரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

மேலும் கரவண்ட் இதுவரை சுயநினைவுக்கு திரும்பவில்லை என்றே சமூக ஆர்வலர் அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...