உலகம்செய்திகள்

கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம்: ஹீரோ என புகழும் ஊடகங்கள்

5 23 scaled
Share

கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம்: ஹீரோ என புகழும் ஊடகங்கள்

லண்டனில், பள்ளிக்குச் செல்லும் வழியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அவளை ஹீரோ என ஊடகங்கள் வர்ணித்துள்ளன

லண்டனில், பள்ளிக்குச் செல்லும் வழியில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் அவளைக் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த சிறுமியின் பெயர் Eliyanna Andam என்று தெரியவந்துள்ளது. 15 வயதான அந்தச் சிறுமி, Croydonஇலுள்ள John Whitgift School என்னும் பள்ளியில் படித்துவந்துள்ளாள்.

தடகள வீராங்கனையான Eliyanna சட்டத்தரணியாக ஆக ஆசைப்பட்டதாகவும், அருமையான பெண், அவளுக்கு நல்ல எதிர்காலம் இருந்தது என்றும் அவளை அறிந்த சிலர் கூறியுள்ள நிலையில், எங்கள் பிள்ளை பள்ளிக்குச் சென்றாள், ஆனால், வீடு திரும்பவேயில்லை என்று கூறி கண்ணீர் வடித்துள்ளார் Eliyannaவின் சித்தி.

உண்மையில், Eliyannaவுக்கும் அவரைக் கொலை செய்த நபருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. 17 வயது பையன் ஒருவன், Eliyannaவின் தோழியைக் காதலித்துள்ளான். இருவரும் சமீபத்தில் பிரிந்துவிட்டிருக்கிறார்கள். அந்தப் பையன், மீண்டும் தங்கள் காதலை புதுப்பித்துக்கொள்ள விரும்பியிருக்கிறான்.அவளோ அதை ஏற்றுகொள்ள மறுத்திருக்கிறாள்.

தன் காதலை அவள் ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே தான் கொண்டு வந்த கத்தி ஒன்றை எடுத்திருக்கிறான் அவன். அப்போது தன் தோழியைக் காப்பாற்ற Eliyanna குறுக்கே வர, ஆத்திரத்தில் அவளைக் கத்தியால் குத்தியிருக்கிறான் அந்தப் பையன்.

கழுத்திலும் நெஞ்சிலும் கத்தியால் குத்தப்பட்டEliyanna பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.

தன் தோழியைக் காப்பாற்ற உயிரைத் துறந்த Eliyannaவை ஊடகங்கள் ஹீரோ என வர்ணித்துள்ளன.

இதற்கிடையில் Eliyannaவைக் கத்தியால் குத்திய நபரை 75 நிமிடங்களில் மடக்கிப் பிடித்துள்ள பொலிசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...