உலகம்செய்திகள்

கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

Share

கடும் பணியாளர் தட்டுப்பாடு: ஜேர்மன் நிறுவனம் எடுத்துள்ள முடிவு

பணியாளர் பற்றாக்குறை காரணமாக, ஜேர்மன் நிறுவனம் ஒன்று, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றில் பணியாளர் பற்றாக்குறை நிலவுகிறது. பணி ஓய்வு பெறும் வயது வந்தவர்கள் ஓய்வு பெறுகிறார்கள்.

ஆனால், அவர்களுடைய இடத்தை நிரப்ப புதிதாக, தகுதியுடைய இளைஞர்கள் இல்லை.

ஜேர்மன் நிறுவனமான Lufthansa Technikக்கு டிசம்பர் மாதம் வாக்கில், சுமார் 2,000 திறன்மிகுப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.

ஆனால், அந்த இடத்தை நிரப்ப ஆட்கள் இல்லை என்பதுடன், அப்படி புதிதாக பணிக்கு எடுப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட பணிகளில் அனுபவமும் இல்லை.

ஆகவே, குறிப்பிட்ட அளவிலான பணியிடங்களையாவது நிரப்புவதற்காக, பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அழைத்துள்ளது Lufthansa Technik நிறுவனம்.

விடயம் என்னவென்றால், இப்படி பணி ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணிக்கு அமர்த்துவதால், நிறுவனத்துக்கு அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இப்படி ஓய்வு பெற்ற பின் பணிக்குத் திரும்புபவர்களுக்கு, ஓய்வூதியத்துடன் கூடுதல் வருவாயும் கிடைக்கிறது என்பதால், பணியாளர்களுக்கும் லாபம், நிறுவனத்துக்கும் லாபம் என்னும் நிலை காணப்படுகிறது.

ஆனால், எவ்வளவு காலத்துக்கு இதே நிலை நீடிக்கமுடியும் என்பது கேள்விக்குறிதான் என்பதையும் மறுப்பதற்கில்லை.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...