tamilni Recovered 6 scaled
உலகம்செய்திகள்

பாலியல் அடிமைகளாக 1500 சிறார்களா? மத வழிபாட்டு தலைவரின் செயல்

Share

பாலியல் அடிமைகளாக 1500 சிறார்களா? மத வழிபாட்டு தலைவரின் செயல்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தன்னை கடவுள் என கூறிக்கொள்ளும் நபரிடம் இருந்து 1,500 சிறார்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டவரான Jey Rence B Quilario என்பவர் உருவாக்கிய விசித்திர குழுவிடம் தற்போது 1,500 சிறார்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் Save The Children என்ற அமைப்பு அந்த சிறார்களை மீட்க களமிறங்கியுள்ளது.

அத்துடன் Quilario என்ற அந்த நபர் போதை மருந்து தயாரிக்கும் ஆலை ஒன்றையும் நடத்தி வருவதாக செனட்டர் ரொனால்ட் டெலா ரோசா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பல்வேறு தலைவர்கள் இந்த விவகாரத்தில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறார்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

பலாத்காரம், பாலியல் வன்கொடுமை, சிறார் துஷ்பிரயோகம் உள்ளிட்ட கொடுமைகளை அரங்கேற்றும் ஒரு வழிபாட்டு முறை உண்மையில் சட்டத்திற்கு புறம்பானது என குறிப்பிட்டுள்ள செனட்டர் ஒருவர், சிறார்களுக்கு கட்டாயத் திருமணம் போன்ற கொடுமைகளை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது முறையல்ல என்றார்.

ஆயிரக்கணக்கான சிறார்களை பாலியல் அடிமையாக கொண்டுள்ள ஒரு குழு அது, அதன் தலைவர் மீது உடனடி நடவடிக்கை தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபத்தான ஒரு நபரின் கைகளில் தற்போது சிறார்கள் சிக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த குழுவானது தொடக்கத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பாகவே இயங்கி வந்துள்ளது. ஆனால் 2017ல் Omega de Salonera என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன், விசித்திரமான மத வழிபாட்டு குழுவாகவும் மாறியது.

மட்டுமின்றி, தங்கள் குழுவில் இணைந்து கொள்ளாதவர்கள் நிலநடுக்கத்தில் சிக்கி கொல்லப்படுவார்கள் எனவும் விளம்பரம் செய்தது. தற்போது முன்வைக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்த குழு நிராகரித்துள்ளதுடன், சிறார்களை பாலியல் அடிமைகளாக பாதுகாத்து வருவது என்பது வெறும் கற்பனை எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த குழுவில் தற்போது 1,580 சிறார்கள் உட்பட 3,500 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...