medium 2023 09 22 b76a50e861
உலகம்செய்திகள்

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர்

Share

பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐபோன்-15’ -யை வாங்கிய இளைஞர்

அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 17 மணி நேரம் வரிசையில் காத்திருந்து முதல் ‘ஐ போன்-15’ -யை வாங்கியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்களில் ஐபோன்-15 என்ற மாடல் இந்தியாவில் நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஆப்பிள் ஐபோன் விற்பனை நிலையங்களில் கூட்டம் களைகட்ட தொடங்கியது.

இதில், வாடிக்கையாளர்கள் நேற்று முன்தினத்தில் இருந்தே ஐபோனை வாங்குவதற்காக குவியத் தொடங்கினர்.

அந்தவகையில், மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்தில் கூட்டம் அதிகமாகி, வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஐபோனை வாங்கிய முதல் நபர்
அகமதாபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் உள்ள ஐபோன் விற்பனை நிலையத்தில் 17 மணிநேரம் வரிசையில் நின்று இந்தியாவில் விற்பனைக்கு வந்த ஜபோன்-15 -யை வாங்கியுள்ளார்.

இது குறித்து அந்த இளைஞர் கூறும்போது, “இந்த போனை வாங்குவதற்காக நேற்று மாலை 3 மணி முதல் இருக்கிறேன். இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோரில் வாங்குவதற்காக 17 மணிநேரம் வரிசையில் நின்று, முதல் நாளிலே வாங்கியதில் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...