tamilni 260 scaled
உலகம்செய்திகள்

என்ன இருந்தாலும் அவரைப்போல வராது… குறைந்த தலைவர்கள் மீதான ஆர்வம்!

Share

என்ன இருந்தாலும் அவரைப்போல வராது… குறைந்த தலைவர்கள் மீதான ஆர்வம்!

பிரித்தானிய மன்னர் சார்லசும் அவரது மனைவி கமீலாவும் பிரான்சுக்கு வருகை புரிந்துள்ளனர். என்றாலும், பிரான்ஸ் மக்களுக்கு பிரித்தானிய தலைவர்கள் மீதான ஆர்வம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவின் தலைவராக மகாராணி இரண்டாம் எலிசபெத் இருந்தபோது, அவர் மீது பிரான்ஸ் மக்களுக்கு இருந்த ஆர்வம், தற்போது மன்னராக இருக்கும் சார்லஸ் மீது இல்லை.

மகாராணியாரைப் போன்ற வரலாற்று முக்கியத்துவம் சார்லசுக்கு இல்லை என பிரான்ஸ் நாட்டவர்கள் கருதுகிறார்கள். அவர் மகாராணியாரின் மகன் மட்டுமே, மேலும், மன்னருக்கும் ராணிக்கும் வயதாகிவிட்டது, அவர்களுக்கு பெரிதாக வரலாறு ஒன்றும் இல்லை என்கிறார் Mireille Mauve என்பவர்.

மன்னர் மட்டுமல்ல, ராணி கமீலாவும் மக்களை ஈர்க்கவில்லை என்கிறார் Mireille Mauve. கமீலாவிடம் அந்த ஈர்க்கும் தன்மை இல்லை. பேசுவதும் டல்லாக பேசுகிறார். மொத்தத்தில், அவர் மீது பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை என்கிறார் அவர்.

வயதானவர்கள்தான் இப்படி சொல்கிறார்கள் என்றால், இளைய தலைமுறையின் கருத்தும் அப்படித்தான் இருக்கிறது. 15 வயதாகும் Alexia Aubert, மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவோடு ராஜ குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கியத்துவத்துவத்தை இழந்துவிட்டன என்கிறார்.

ராணி எலிசபெத் மறைந்தபின் ராஜ குடும்பம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவில்லை என்று கூறும் Alexia Aubert, ராணி எலிசபெத்தைப் போல மன்னர் சார்லஸ் முக்கியமானாவராகவோ, ராஜ குடும்பத்தின் ஒரு அடையாளமாகவோ தோன்றவில்லை. ஆகவே, அவர் பிரான்ஸ் வருவது பெரிய விடயமாக தெரியவில்லை என்கிறார்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 21 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் முதல் வாகனங்களுக்குப் புதிய வரி! – அவசரப்பட்டு வாகனங்களை வாங்க வேண்டாம் என இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1, 2026 முதல் 2.5 சதவீத சமூக...

image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...