tamilni Recovered scaled
உலகம்செய்திகள்

ஜேர்மன் கிராமங்களில் சாண்ட்விச்சை வீசிச்செல்லும் மர்ம நபர்

Share

ஜேர்மன் கிராமங்களில் சாண்ட்விச்சை வீசிச்செல்லும் மர்ம நபர்

ஜேர்மன் கிராமங்கள் சிலவற்றில், காரில் செல்லும் மர்ம நபர் ஒருவர் சாண்ட்விச்களை வீசிச்செல்வதால் மக்கள் எரிச்சலடைந்துள்ளார்கள்.

வடமேற்கு ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத்திலுள்ள Königsborn மற்றும் Heyrothsberge என்னும் இரண்டு கிராமங்களுக்கு இடையில் காரில் பயணிக்கும் ஒருவர், கடந்த ஆறு மாதங்களாக காரிலிருந்து சாண்ட்விச்களை வீசிச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

வார நாட்களில், தினமும் காலை 6.00 மணிக்கு முன் இப்படி அவர் சாண்ட்விச்களை வீசிச் செல்வதால், வேலைக்குச் செல்லும் வழியில் அவர் இப்படிச் செய்வதாக கருதப்படுகிறது.

சில நேரங்களில் அப்படி வீசி எறியப்படும் சாண்ட்விச்கள் அருகிலுள்ள வீடுகளில் தோட்டத்தில் சென்று விழுவதால், அந்த வீட்டுக்காரர்கள் எரிச்சலடைகிறார்கள்.

அவர் எதற்காக இப்படிச் செய்கிறார் என்பது தெரியவில்லை. ஆனால், அந்த நபருக்கு யாரோ அன்பிற்குரியவர் ஒருவர் ஒரு சாட்விச்சைக் கொடுத்திருக்கலாம். ஆனால், அது அவர்களுக்கு பிடிக்கவில்லை. இந்த விடயத்தை அவரால் அந்த நபரிடம் சொல்ல முடியாமல் போயிருக்கலாம். ஆகவே, அதன் பலனை அவர் இப்போது அனுபவிக்கக்கூடும் என்கிறார் மனோதத்துவ நிபுணர் ஒருவர்.

விடயம் என்னவென்றால், ஓடும் காரிலிருந்து இப்படி பொருட்களை தூக்கி வீசுவது Saxony-Anhalt மாகாணத்தில் குற்றமாகும். ஆகவே, அந்த நபர் சிக்கினால், உள்ளூர் மக்களுடைய கோபத்துக்கு ஆளாவதுடன், அவர் 400 யூரோக்கள் வரை அபராதமும் செலுத்தவேண்டியிருக்கும்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...