333 scaled
உலகம்செய்திகள்

இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ!

Share

இட்லி வியாபாரம் செய்யும் சந்திரயான் 3 திட்ட பொறியாளர்..காரணம் இதோ!

சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த திட்ட பொறியாளருக்கு சம்பளம் வழங்காததால், இட்லி வியாபாரம் செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான் 3 விண்கல திட்டத்தின் மூலம் நிலவுக்கு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது ஒரு பக்கம் இருந்தாலும், திட்டத்திற்கு பணியாற்றிய பொறியாளர் ஒருவர் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுவது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனம் இணைந்து பணியாற்றியது.

இந்த நிறுவனத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவில், மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் பணியாற்றி வந்தார். இவர், இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கல திட்டத்திற்காக மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், தீபக் குமார் பணியாற்றிய ஹெச்.இ.சி நிறுவனம் தங்களுடைய 2,800 ஊழியர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.

இதனால், தீபக் குமார் தன்னுடைய மகள்களுக்கு பள்ளி கட்டணத்தை கூட கட்ட முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார். எனவே, செலவே சமாளிக்க முடியாத காரணத்தினால் ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டடத்திற்கு எதிரே சாலையில் ஒரு சிறிய உணவகத்தை அமைத்து இட்லி வியாபாரம் செய்து வருகிறார்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தின் செலவை பார்த்து வருகிறார். அதாவது, காலையில் ஹெச்.இ.சி நிறுவனத்திற்கு சென்று பணியாற்றிவிட்டு, மாலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.

Share
தொடர்புடையது
image 1200x800 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அமைச்சரவையின் புதிய முடிவு: வீடற்ற துறவிகளின் பெற்றோர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் நிதி உதவி.

பௌத்த சாசனத்தின் நிலைத்தன்மைக்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெற்றோர்களைக்...

image 1200x800 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை: இலங்கையின் எந்தெந்தப் பகுதிகளில் மழை பெய்யும்?

இலங்கையின் தென்கிழக்கே, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நீடித்து வருவதால்,...

image 1200x800 32
செய்திகள்அரசியல்இலங்கை

சமன் ஏக்கநாயக்கவின் பிணை மனு: இன்று தீர்ப்பு! – ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயண நிதி விவகாரத்தில் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்க, இன்று (18) மீண்டும் கொழும்பு...

image 1200x800 30 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிறப்புச் சான்றிதழுக்கு ரூ. 1,000 இலஞ்சம்: ஆலையடிவேம்பு உதவிப்பதிவாளர் கையும் மெய்யுமாகக் கைது!

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளராகப் பணியாற்றும் உதவிப்பதிவாளர் ஒருவர், பிறப்புச் சான்றிதழை...