உலகம்செய்திகள்

ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை

Share

ஜப்பானில் 10 ஒருவர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள்: வீழ்ச்சியில் இளைஞர்கள் தொகை

முதன்முறையாக ஜப்பானில் 10 பேரில் ஒருவர் 80 வயதிற்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பான் உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் கூற்றுப்படி, 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் விகிதத்தை கொண்டு ஜப்பான் உலகின் மிக வயதான மக்கள் தொகை கொண்ட நாடு என தெரிவித்துள்ளது.

சுமார் 125 மில்லியன் மக்கள் தொகையில் 29.1% பேர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பதாக ஜப்பானின் தேசிய தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன.

தேசிய மக்கள் தொகை மற்றும் சமூக பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல் படி, 2040ம் ஆண்டுக்குள் ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 34.8% ஆக இருக்கும் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் ஜனவரி மாதம் நாட்டில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் மக்களால் சமூகமாக செயல்பட முடியாத நிலையில் இருப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

ஜப்பானை தொடர்ந்து இத்தாலி முதியவர்கள் மக்கள் தொகை 24.5%, பின்லாந்து 23.6% ஆக உள்ளது, இதுவே உலகின் இரண்டாவது மற்றும் மூன்றாவது வயது முதியவரின் நாடுகளின் வரிசையில் உள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...