5 3 scaled
உலகம்செய்திகள்

முதன்முறையாக தனியாக வெளிநாடு செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்

Share

முதன்முறையாக தனியாக வெளிநாடு செல்லும் பிரித்தானிய இளவரசர் வில்லியம்

முதன்முறையாக தன் கணவரான இளவரசர் வில்லியமை தனியாக வெளிநாடொன்றிற்கு அனுப்பிவைத்துள்ளார் அவரது மனைவியான இளவரசி கேட்.

முதன்முறையாக மனைவி கேட் இல்லாமல் தனியாக வெளிநாடு செல்கிறார் பிரித்தானிய இளவரசர் வில்லியம்.

Earthshot Prize என்னும் சுற்றுச்சூழலுக்கான விருதொன்றை உருவாக்கியவர் இளவரசர் வில்லியம். பின்னர், அது ஒரு தொண்டு நிறுவனமாக மாற்றப்பட்டது. சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போருக்கு இந்த விருது வழங்கப்படும்.

தற்போது, அமெரிக்காவில் சுற்றுச்சூழல் தொடர்பிலான Earthshot Prize Innovation Summit என்னும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதற்காகத்தான் இளவரசர் வில்லியம் அமெரிக்கா சென்றுள்ளார்.

சாதாரண மனிதர்கள் இளவரசர்களை அன்னாந்து பார்த்து, நமக்கும் அவர்களைப்போல வாழ்வு கிடைக்காதா என ஏங்கும் நிலையில், இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல, இளவரசர் குடும்பத்தினர், தங்கள் பிள்ளைகள் சாதாரண மனிதர்களைப்போல சாதாரணமாக வாழவேண்டும் என நினைக்கிறார்கள்.

ஆகவேதான் வில்லியம் அல்லது கேட், பிள்ளைகளை பள்ளியில் கொண்டு விடுகிறார்கள். இரவு உணவின்போது, நிச்சயம் தந்தை அல்லது தாய் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிடுவதை உறுதிசெய்கிறார்கள்.

ஆக, தங்கள் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வதற்காகத்தான், கேட் தன் கணவர் வில்லியமுடன் அமெரிக்கா செல்லவில்லையாம்.

அத்துடன், நேற்று இளவரசி கேட் ராணுவம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவும் வேண்டியிருந்தது. சமீபத்தில் மன்னர் சார்லஸ் Commodore-in-Chief of the Fleet Air Arm என்னும் முக்கிய பொறுப்பை இளவரசி கேட்டுக்கு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...