1 14 scaled
உலகம்செய்திகள்

மீன் உணவு சாப்பிட்டு கை, கால்களை இழந்த தாயார்! அதிர்ச்சி தகவல்

Share

அமெரிக்காவில் திலாப்பியா மீன் உணவை சாப்பிட்ட தாயார் ஒருவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டு, தற்போது கை, கால்கள் துண்டிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

மிக ஆபத்தான பாக்டீரியாவால் மாசுபட்ட திலாப்பியா மீன் உணவை சாப்பிட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 40 வயதான லாரா பராஜாஸ்.

இவரே வியாழக்கிழமை உயிர் காக்கும் அறுவைசிகிச்சைக்கு உள்ளானார். சுமார் ஒரு மாத காலம் சிகிச்சைக்கு பின்னர், மருத்துவர்கள் இந்த முடிவுக்கு வந்திருந்தனர். உள்ளூர் சந்தை ஒன்றில் இருந்து திலாப்பியா மீன் வாங்கியுள்ளார் லாரா பராஜாஸ்.

அந்த உணவை சமைத்து சாப்பிட்ட நிலையிலேயே அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மிக ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட லாராவுக்கு கோமா நிலையில் சிகிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கை விரல்கள், கால் பாதங்கள், கீழ் உதடு என மொத்தமும் கறுத்துப் போனது. அவரது சிறுநீரகமும் செயலிழந்து வந்தது. மருத்துவர்கள் தெரிவிக்கையில், Vibrio Vulnificus என்ற கொடியவகை பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட மீனை அவர் உட்கொண்டுள்ளார்.

இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, காயங்களுடன், இந்த பாக்டீரியா காணப்படும் கடல் நீரில் குளித்தாலும், உயிருக்கு ஆபத்து தான் என கூறுகின்றனர்.

உடலில் நோயெதிர்ப்பு சக்தியை இந்த பாக்டீரியா பலவீனமாக்கும் எனவும் ஆண்டுக்கு 150 முதல் 200 பேர்கள் வரையில் இந்த பாக்டீரியா பாதிப்பால் சிகிச்சை பெறுவதாகவும், இதில் ஐந்தில் ஒருவர் மரணமடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...