உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

Share

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார்.

அப்போது விஷப்பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் பலமுறை கடித்தது. இதனால் அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது.

அவசர மருத்துவ முதலுதவி குழு தேவையான அனைத்து சிகிச்சைகளை செய்த நிலையிலும், விஷப்பாம்பு கடித்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையில் முதலில் விஷப்பாம்பு காலில் சுற்றிய 69 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடனடியாக மேக்கே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
07 8
உலகம்செய்திகள்

ஈரான் போருக்கு பிரிட்டனின் உதவி தேவையில்லை: பிரதமர் கீர் ஸ்டார்மரை விமர்சித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் போரில், பிரிட்டனின் ஆதரவு...

06 7
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு அவசரக்கால ஆயுத விற்பனை: அமெரிக்க காங்கிரஸ் அனுமதியைத் தவிர்த்த ட்ரம்ப் நிர்வாகம்

ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் படைகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இஸ்ரேலுக்கு சுமார்...

05 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறை சிறைச்சாலையில் கைதிகள் இடமாற்றம்: பதற்றமான சூழலால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

மாத்தறை சிறைச்சாலையிலிருந்து ஒன்பது கைதிகள் அங்கிருந்த அங்கிருந்து அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, மாத்தறை சிறைச்சாலையினுள்...

04 7
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிளங்கன் வைத்தியசாலை துஷ்பிரயோகச் சம்பவம்: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் போராட்டத்திற்கு தடை!

டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் பெண்ணின் உடல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும்...