உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

Share

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார்.

அப்போது விஷப்பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் பலமுறை கடித்தது. இதனால் அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது.

அவசர மருத்துவ முதலுதவி குழு தேவையான அனைத்து சிகிச்சைகளை செய்த நிலையிலும், விஷப்பாம்பு கடித்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையில் முதலில் விஷப்பாம்பு காலில் சுற்றிய 69 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடனடியாக மேக்கே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...