உலகம்செய்திகள்

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

Share

அவுஸ்திரேலியாவில் முதியவரின் காலில் சுற்றிய விஷப்பாம்பு: நண்பருக்கு நேர்ந்த சோகம்

நண்பரை காப்பாற்ற முயன்று விஷப் பாம்பு கடித்ததில் அவுஸ்திரேலியாவை சேர்ந்த முதியவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கவுமாலா அரசு பள்ளியின் 100வது ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட 69 வயதுடைய நபரின் காலில் விஷப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டது, இதனை பார்த்த அவருடைய நண்பர் உடனடியாக விஷப்பாம்பை நண்பரின் காலில் இருந்து அகற்றும் வேலையில் ஈடுபட்டார்.

அப்போது விஷப்பாம்பு அவரது கைகள் மற்றும் நெஞ்சு பகுதியில் பலமுறை கடித்தது. இதனால் அவருக்கு சம்பவ இடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது.

அவசர மருத்துவ முதலுதவி குழு தேவையான அனைத்து சிகிச்சைகளை செய்த நிலையிலும், விஷப்பாம்பு கடித்ததில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையில் முதலில் விஷப்பாம்பு காலில் சுற்றிய 69 வயது முதியவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் உடனடியாக மேக்கே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...