23 64fccfcc1859e
உலகம்செய்திகள்

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

Share

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

ஆண்டு பிறந்து இந்த 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தனடனையை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், அதிகாரிகளின் கொலைப்பசியால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான முகமது பின் நாசர் என்பவருக்கு, சமூக ஊடக செயல்பாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது தன் மதத்தை காட்டிக்கொடுத்தது, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டில் தமக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை ஒழிக்க முயற்சித்து வருவதையே அதிகரிக்கும் மரண தண்டனை எண்ணிக்கை காட்டுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

2015ல் இருந்தே சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உலகளவில் தனது நாட்டின் மதிப்பை உயர்த்தவும், தன்னை ஒரு நவீனத்துவவாதியாக சித்தரிக்கவும் அவர் முயன்று வருகிறார்.

வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார், ஆனால் அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரணதண்டனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2015ல் இருந்து சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு சராசரியாக 129 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ல் மட்டும் 196 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...