23 64fccfcc1859e
உலகம்செய்திகள்

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

Share

கொலைக்களமாகும் மத்திய கிழக்கு நாடு! 100 பேர்களுக்கு மரண தண்டனை

ஆண்டு பிறந்து இந்த 8 மாதங்களில் சவுதி அரேபியா நீதிமன்றங்கள் இதுவரை 100 பேர்களுக்கு மரண தனடனையை நிறைவேற்றியுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான வழக்குகளில் சமூக ஊடக பதிவுகள் அல்லது போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மக்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, முறையான விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், அதிகாரிகளின் கொலைப்பசியால் தற்போது சிறையில் இருக்கும் பல இளைஞர்கள் மரண பயத்தில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டில், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியரான முகமது பின் நாசர் என்பவருக்கு, சமூக ஊடக செயல்பாட்டுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது தன் மதத்தை காட்டிக்கொடுத்தது, சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக சதி செய்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதியப்பட்டது.

ஆனால் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டில் தமக்கு எதிரான எதிர்ப்புக் குரல்களை ஒழிக்க முயற்சித்து வருவதையே அதிகரிக்கும் மரண தண்டனை எண்ணிக்கை காட்டுவதாகவும் பரவலாக கூறப்படுகிறது.

2015ல் இருந்தே சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் சல்மானின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உலகளவில் தனது நாட்டின் மதிப்பை உயர்த்தவும், தன்னை ஒரு நவீனத்துவவாதியாக சித்தரிக்கவும் அவர் முயன்று வருகிறார்.

வன்முறையை தூண்டாத குற்றங்களுக்கு மரண தண்டனையை குறைப்பதாக அவர் உறுதியளித்துள்ளார், ஆனால் அவரது ஆட்சியின் கீழ் வருடாந்தர மரணதண்டனைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

2015ல் இருந்து சவுதி அரேபியாவில் ஆண்டுக்கு சராசரியாக 129 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. 2022ல் மட்டும் 196 பேர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத உச்சம் இதுவென கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...