kamadenu 2023 09 732ef9ab a02c 458d 8830
உலகம்செய்திகள்

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

Share

மொராக்கோ நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 820 ஆக உயர்வு!

மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று இரவு 6.8 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தினால் மாரகெச் நகர் அதிகமாக பாதிக்கப்பட்டது.

வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.

முதற்கட்டமாக 296 பேர் பலியானதாகவும், 153 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் 672 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதனால் துரித கதியில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. ரபாத் நகரில் 1,000 கூடாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share
தொடர்புடையது
23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...