4 22 scaled
உலகம்செய்திகள்

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

Share

வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் பொறியாளர் விபரீத முடிவு

தமிழக மாவட்டம், கன்னியாகுமரியில் பொறியாளர் ஒருவர், கல்விக்கடன் தொடர்பாக வங்கியிலிருந்து வந்த நோட்டீஸால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் மேலத்தெரு மெயின்ரோடு ஆமத்தன் பொத்தை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் உதயகுமார் (64) மற்றும் ஜெயஸ்ரீ (56). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மகள் திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வருகிறார். மகன் கணேஷ்ராஜா (28) எம்.இ படித்து முடித்து சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இவர், இரணியல் கிளையில் உள்ள ஒரு தேசிய வங்கியில் கல்விக்கடனாக 2.5 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார். இந்த கடனை கட்டி முடிக்காததால் இலவச சட்ட மையத்தில் இருந்து கணேஷ் ராஜா இன்று (செப்.08) ஆஜராகுமாறு அழைப்பாணை வந்துள்ளது.

இதன் பிறகு, இந்த தகவலை கணேஷ் ராஜாவின் தாயார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அப்போது தனது தாயிடம், நான் உயிருடன் இருக்க மாட்டேன் எனக் கூறி கணேஷ் ராஜா கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில், கணேஷ் ராஜா சென்னையில் இருந்து கன்னியாகுமரியில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கல்விக்கடன் தள்ளுபடி ஆகும் என்று நினைத்தேன் என விரக்தியில் பெற்றோரிடம் மன வேதனையுடன் கூறியுள்ளார்.

அப்போது, அவர்கள் கடனை கட்டி விடலாம் என்றும், இலவச சட்ட மையத்திற்கு ஆஜராகி விட்டு வரும்படியும் கூறியுள்ளனர்.

பின்னர், மாடி அறைக்கு சென்ற கணேஷ் ராஜா கதவை பூட்டியுள்ளார். இதனால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை திறந்து பார்த்த போது தூக்கிட்டு மயங்கிய நிலையில் கணேஷ் ராஜா கிடந்துள்ளார்.

இதனையடுத்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கணேஷ் ராஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் குறித்து உதயகுமார் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...